இந்த வாரம்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர் தமிழர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்: மூப்பனார்
சென்னை:
பெங்களூரிலும் கர்நாடகத்தின் பிற பகுதிகளிலும் வசிக்கும் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு கர்நாடக அரசுக்கு தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் கோரிக்கை விடுத்துள்ளார்.
கன்னட நடிகர் ராஜ்குமார் சந்தன வீரப்பனால் கடத்தப்பட்டதையடுத்து பெங்களூரில் தமிழர்கள் மீது தாக்குதல் நடந்து வருகிறது.
இது குறித்து மூப்பனார் வெளியிட்டுள்ள அறிக்கையில், வீரப்பனின் முட்டாள்தனமான செயலுக்கு தமிழர்களை தாக்குவது ஏற்கத்தக்கதல்ல. பெங்களூரின் இன்றைய மாபெரும் வளர்ச்சிக்கு கன்னடர்களுடன் தமிழர்களும் பல வகைகளில் உதவியுள்ளனர்.
ராஜ்குமாரை நக்கீரன் ஆசிரியர் கோபால் பத்திரமாக மீட்டு வருவார். கோபாலை கண்டு நாடே பெருமைப்படுகிறது என்றுகூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications