For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்த வாரம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை செல்கிறார் கர்நாடக போலீஸ் ஐ.ஜி.

சென்னை:

சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்டுள்ள கன்னட நடிகர் ராஜ்குமார் உள்பட 4 பேரை மீட்பது குறித்து தமிழக போலீஸ் அதிகாரிகளுடன்பேச கர்நாடக மாநில போலீஸ் ஐஜி சீனிவாசன் சென்னை விரைகிறார்.

இத் தகவலை தமிழக உள்துறைச் செயலர் சாந்த ஷீலா நாயர், சென்னையில் நிருபர்களிடம் புதன்கிழமை தெரிவித்தார்.

அவர் கூறுகையில், கன்னட நடிகர் ராஜ்குமார் உள்பட 4 பேரை சந்தனக்கடத்தல் வீரப்பன் கடத்திச் சென்றுள்ளான். இது தொடர்பாக கர்நாடக, தமிழகஅரசுகள் தீவிர நடவடிக்கை மேற் கொண்டுள்ளன.

இப் பிரச்சினை தொடர்பாக தமிழக உயர் அரசு அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன்.

தற்போது கிடைத்த தகவலின்படி நக்கீரன் கோபால் காட்டுக்குள் சென்றுவிட்டார். அவர் வீரப்பனைச் சந்தித்தாரா என்பது பற்றி தகவல் ஏதும்இல்லை.

வீரப்பன் கொடுத்தனுப்பிய கேஸட்டில், தன்னைச் சந்திக்க தூதர் ஒருவரை அனுப்பும்படி மட்டுமே கேட்டுள்ளான். மற்றபடி வேறு எந்த கோரிக்கையோ,நிபந்தனையோ அதில் இல்லை.

ராஜ்குமாரையும் மற்றவர்களையும் வீரப்பனிடமிருந்து மீட்பது குறித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக உயர் போலீஸ் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தகர்நாடக போலீஸ் ஐஜி சீனிவாசன் சென்னை வர உள்ளார் என்றார் சாந்த ஷீலா நாயர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X