For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் உட்பட 5பேர் சாவு

By Staff
Google Oneindia Tamil News

கோவை வருகிறது ஆதித்யா பிர்லாவின் விஸ்கோஸ் இழை

கோவை:

திருப்பூர் பின்னலாடைத் தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் வகையில், புதியவிஸ்கோஸ் இழையை கிராசிம் மற்றும் ஆதித்யா பிர்லா நிறுவனங்கள் திருப்பூரில்அறிமுகப்படுத்துகின்றன.

இதனால், ஏற்றுமதியை அதிகரிக்க முடியும் என இந்நிறுவனங்கள் நம்பிக்கைதெரிவித்துள்ளன. கிராசிசாஃப்ட் என்ற இந்த இழையை பின்னலாடை ஏற்றுமதிவளர்ச்சிக் கவுன்சில் தலைவர் ரெட்டி துவக்கி வைத்தார்.

விஸ்கோஸ் இழை விற்பனைப் பிரிவுத் தலைவர் தாமஸ் வர்கீஸ், திருப்பூரில்நிருபர்களிடம் கூறியதாவது:

வெளிநாடுகளில் பருத்தியை மட்டுமே இந்தியா அதிக அளவில் உற்பத்தி செய்யமுடியும் என்ற நிலை இருந்து வருகிறது. ஆனால், கிராசிம் கம்பெனி, இந்தியாவால்விஸ்கோஸ் இழையை அதிக அளவில் உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலையைஉருவாக்கி வருகிறது.

விஸ்கோஸ் இழைகளினால் ஆன அடைகளுக்கு ஐரோப்பாவில் நல்ல வரவேற்புஉள்ளது. ஐரோப்பாவில், இந்த இழைகளை உற்பத்தி செய்ய அதிக செலவாகும்.இந்தியாவில் மலிவு விலையில் உற்பத்தி செய்ய முடியும். கிரசிம், நாள் ஒன்றிற்குஆயிரத்து 50 டன் விஸ்கோஸ் இழையைத் தயார் செய்யும் திறன் கொண்டது.

இந்த நிறுவனம், இந்தியாவில் 3 விஸ்கோஸ் தொழிற்சாலையையும்,இந்தோனேஷியா, மற்றும் தாய்லாந்தில் தலா ஒரு தொழிற்சாலையையும்கொண்டுள்ளது. விஸ்கோஸ் இழையை மிக குறைந்த விலையில் இந்நிறுவனம்விற்பனை செய்வதால், போட்டியிடுவதில் எவ்வித சிரமமும் இல்லை.

கிராசிசாஃப்ட் இழை பாலியஸ்டர் மற்றும் பருத்தியுடன் கலந்து குழந்தைகள் மற்றும்பெண்களுக்கான ஆடைகளைத் தயாரிக்கப் பயன்படுத்தலாம். மிகவும் மிருதுவானதன்மையை இந்த இழை கொண்டுள்ளது என்றார்.

விழாவில் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சக்திவேல் பேசும்போது,ஏற்றுமதியாளர்கள் தங்களது பின்னலாடைகளை எளிதாக ஏற்றுமதி செய்ய இந்த இழைஉதவும். மேலும் மதிப்புமிக்க துணிகளை உற்பத்தி செய்யவும், சர்வதேச மார்க்கெட்டில்போட்டியிடவும் இந்த இழை உதவும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X