ராஜ்குமாருக்காக அணி திரளும் நடிகர் பட்டாளம்
சென்னை:
நடிகர் ராஜ்குமாரை மீட்பதற்காக வீரப்பனைச் சந்திக்க காட்டுக்குச் செல்லத் தயார்என்று மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
ராவணன் கடத்திச் சென்ற சீதையை மீட்க இலங்கைக்கு ராமர் செல்ல வசதியாகராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு கடல்மார்க்கமாக பாலம் அமைக்கப்பட்டது.அப்பணியில் ஆயிரக்கணக்கான வானரங்கள் ஈடுபட்டன.
இவை எல்லாவற்றையும் ஒரு அணிலின் பணிதான் ராமருக்கு வியப்பை அளித்தது.அதைப் போல, சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்திச் சென்றுள்ள பிரபல கன்னடதிரைப்பட நடிகர் ராஜ்குமாரை மீட்கும் பணியில் தங்களது பங்கேற்பை அளிக்கதிரையுலகத்தினர் திரண்டு வந்துள்ளனர்.
வீரப்பனைச் சந்திக்கத் தயாராக இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த், கன்னடநடிகர் அம்பரீஷ், தெலுங்கு நடிகை ஜெயப்பிரதா ஆகியோர்ஏற்கெனவே அறிவித்துள்ளனர்.
தென்னிந்திய நடிகர்களில் தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, மலையாளத்தில் பிரேம்நசீர், மது, தெலுங்கில் என்.டி. ராமாராவ், நாகேஸ்வரராவ் ஆகியோரைப் போல்கன்னடத்தில் தனது சிறப்பான நடிப்பால் உயரிய இடத்தைப் பிடித்துள்ளவர் ராஜ்குமார்.
அவரை மீட்கும் பணியில் கன்னட, தமிழ், தெலுங்கு நடிகர், நடிகைகளை அடுத்துஇப்போது மலையாள நடிகர்களும் பங்கு கொள்ள வந்துள்ளனர்.
வீரப்பனைச் சந்திக்க ரஜினிகாந்துடன் நாங்களும் காட்டுக்குள் செல்லத் தயார் என்றுமம்முட்டி, மோகன்லால், சுரேஷ் கோபி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
இதைப் போல ஹிந்தி திரைப்பட நடிகரும், பாஜக எம்.பி.யுமான சத்ருக்கன்சின்ஹாவும் வீரப்பனைச் சந்திக்கத் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.ராஜ்குமாருக்காக வீரப்பனிடம் பிணைக் கைதியாக இருக்கவும் தயார் என்றும் அவர்கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications