இமாச்சல பிரதேசத்தில் மழைக்கு 105 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சிம்லா:
இமாச்சல பிரதேச மாநிலத்தில் பெய்த கடும் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு இதுவரை 105 பேர் பலியாகியுள்ளனர்.
கடந்த திங்கள்கிழமை முதல் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மழை பெய்துவருகிறது. திங்கள்கிழமை இரவு முதல் நாப்தா-ஜாக்ரி மின் திட்டப் பகுதியிலுள்ளகுகையில் 300 பேர்சிக்கிக் கொண்டு தவித்தனர். இவர்களை பாதுகாப்புப் படையினர்பத்திரமாக புதன்கிழமை மீட்டனர்.
கின்னாவூர், சிம்லா, குலு, மண்டி ஆகிய மாவட்டங்களில் மழையினால் கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் மழைக்கு 105 பேர் பலியாகியுள்ளனர்.
புதன்கிழமை மட்டும் மழைக்கு 28 பேர் இறந்தனர். இவர்களில் 26 பேர் பெண்கள் மற்றும்குழந்தைகள். அனைவரும் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தனர். ராணுவக்குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் இவர்கள்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications