கோவை மாநாடு திருப்புமுனையாக அமையும் என்கிறார் இளங்கோவன்
கோவை:
கோவையில் நடக்கும் காங்கிரஸ் மாநாடு, தமிழகத்தில் அக்கட்சிக்கு திருப்புமுனையாக அமையும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் இளங்கோவன்தெரிவித்தார்.
கோவையில் நிருபர்களிடம் இளங்கோவன் கூறியதாவது:
கோவையில் ஆகஸ்ட் 5-ம் தேதி சோனியா காந்தி காமராஜர் பிறந்த நாள் விழாவில்கலந்து கொண்டு பேசுகிறார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியே இல்லை என கேலிபேசியவர்களுக்கு இது பலத்த அடியாக இருக்கும்.
தமிழகத்தில் காங்கிரஸ் ஒரு வலுவான சக்தி என்பதை மாநாடு நிரூபிக்கும். எங்களதுபலத்தை நிரூபிக்கவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இது வெற்றிகரமாகஅமைந்தால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இத்தகைய மாநாடுகளைநடத்துவோம்.
சோனியாவுக்கு கருப்புக் கொடி காட்டுவதாக ஒரு சில அமைப்புகள் தெரிவித்துள்ளன.இவர்களை போலீசார் கவனித்துக் கொள்வர்.
கர்நாடகத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவ அரசு தக்கநடவடிக்கை மேற்கொள்ளும் என்று இளங்கோவன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications