வீரப்பனை கோபால் இன்னும் சந்திக்கவில்லை: டிஜிபி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காட்டுப் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் சந்தனக் கடத்தல் வீரப்பனைநக்கீரன் கோபால் இன்னும் சந்திக்க முடியவில்லை என்று தமிழக டிஜிபி எஃப்.சி.ஷர்மா தெரிவித்தார்.

சென்னைத் தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் ஏ. முத்துசாமி மற்றும்உள்துறைச் செயலர் சாந்த ஷீலா நாயர் ஆகியோருடன் வியாழக்கிழமை ஆலோசனைநடத்திய பிறகு நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் உள்பட 4 பேரை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்திச்சென்றுள்ளார். கடத்தப்பட்டவர்களை மீட்க தமிழக, கர்நாடக அரசுகள் தீவிரமுயற்சியில் ஈடுபட்டள்ளன.

வீரப்பன் கோரிக்கையை ஏற்று அவரைச் சந்திக்க நக்கீரன் கோபால் காட்டுக்குள்சென்றுள்ளார். ஆனால், காட்டுப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால்,திட்டமிட்டபடி வீரப்பனை கோபால் சந்திக்க முடியவில்லை.

வீரப்பனை கோபால் சந்தித்துப் பேசியபிறகுதான் தற்போதைய நிலை என்ன,ராஜ்குமாரின் உடல் நிலை எப்படி உள்ளது, வீரப்பனின் கோரிக்கைகள் என்ன என்பதுதெயவரும்.

இதுவரை கோபாலிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை.

விரைவில் அவர் வீரப்பனைச் சந்தித்துப் பேசுவார் என்றும், அவரிடமிருந்து தகவல்வரும் என்று எதிர்பார்த்திருக்கிறோம்.

வீரப்பனைச் சந்திக்க கோபால் காட்டுக்குள் சென்றுள்ளதை அடுத்து அவர் மீதுகர்நாடகத்தில் பதிவு செய்துள்ள வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதாககர்நாடக அரசு தெரிவித்துள்ளது. அத்தகைய கோரிக்கைகள் எதுவும் இங்கேஎழவில்லை என்றார் ஷர்மா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+