ராஜ்குமார் விடுதலைக்காக கர்நாடக முதல்வர் சிறப்பு பூஜை
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமாரும், மேலும் மூன்று பேரும் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் என்று கர்நாடகமுதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா மலை மகாதேஸ்வரர் கோவிலுக்குச் சென்று சிறப்புப் பிரார்த்தனை நடத்தினார்.
பெங்களூரிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள எம்.எம்.ஹில்ஸ் பகுதியிலுள்ள மகாதேஸ்வரர் கோவிலுக்கு முதல்வர் கிருஷ்ணா ஹெலிகாப்டரில்சென்றார்.
அவருடன் அவரது மனைவி பிரேமா, காவல்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே, நடிகர் ராஜ்குமாரின் மூன்றாவது மகன் புனீத் ஆகியோரும்சென்றனர்.
பூஜை முடித்து விட்டுத் திரும்பிய அவர்கள் நேராக நடிகர் ராஜ்குமார் வீட்டிற்குச் சென்றனர். அங்கு ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாவிடம் முதல்வர்கிருஷ்ணா பிரசாதம் கொடுத்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications