ஈரோடு அ.தி.மு.க. செயலர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
கோவை:
ஈரோடு மாவட்ட அ.தி.மு.க. செயலரும் தொழிலதிபருமான ராணா லட்சுமணன்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோட்டில் வளையக்காரன் வீதியில் வசித்து வந்தவர் ராணா லட்சுமணன். இவருக்குதிருமண மண்டபம், கல்வி நிறுவனம், பஸ் ஆகியவை உண்டு. தொழிலதிபரான இவர்,அ.தி.மு.க. வில் கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்துவந்தார்.
இவர் தலையில் பலத்த காயத்துடன் தனியார் மருத்துவமனை ஒன்றில் ஆகஸ்ட் 1-ம்தேதி அனுமதிக்கப்பட்டிருந்தார். பாத்ரூமில் வழுக்கி விழுந்து தலையில் காயம்அடைந்ததாக கூறி சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார் என பிறகு தெரியவந்தது.
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமையன்றுஇறந்தார். இதனால் ஈரோட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications