செங்கோட்டையனுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை
சென்னை:
ஜீவா போக்குவரத்துக் கழக ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர்செங்கோட்டையனுக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 1.05 லட்சம்அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் ஈரோட்டைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டஜீவா போக்குவரத்துக் கழகத்துக்கு உதிரி பாகங்கள் மற்றும் புதிய பஸ்கள் வாங்கியதில்ரூ.2.18 கோடி ஊழல் செய்ததாக முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர்செங்கோட்டையன், ஜீவா போக்குவரத்துக் கழக முன்னாள் நிர்வாக இயக்குனர்வீரப்பன், அமைச்சரின் உதவியாளர் நடராஜன் ஆகியோர் மீது புகார் கூறப்பட்டுவழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக முதலாவது சிறப்பு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார்வழக்குத் தொடர்ந்தனர். இவ் வழக்கில் விசாரணை முடிந்து வெள்ளிக்கிழமை காலைநீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் தீர்ப்பளித்தார்.
இவ் வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட வீரப்பனுக்கு 4 ஆண்டுகள்கடுங்காவலும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இரண்டாவது குற்றவாளியான அமைச்சர் செங்கோட்டையனுக்கு 4 ஆண்டுகள்கடுங்காவலும், ரூ.1.05 லட்சம் அபராதமும் விதித்தார்.
அவரது உதவியாளர் நடராஜனுக்கு 4 ஆண்டுகள் கடுங்காவலும், ரூ. 95 ஆயிரம்அபராதமும் விதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications