வீரப்பனை கோபால் இன்னும் சந்திக்கவில்லை

Subscribe to Oneindia Tamil

வீரப்பனுக்கு நன்றி கூறும் ராஜ்குமார் குடும்பத்தினர்

பெங்களூர்:

நடிகர் ராஜ்குமாரைக் கேசட்டில் பேச அனுமதித்ததற்கும், அவரைப் பத்திரமாக பார்த்துக் கொள்வதற்கும் அவரது குடும்பத்தினர் வீரப்பனுக்கு நன்றிதெரிவித்துள்ளனர்.

வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்ட நடிகர் ராஜ் குமார், கேசட்டில் தனது பேச்சைப் பதிவு செய்து கோபால் மூலம் தமிழக முதல்வர் கருணாநிதிக்குஅனுப்பியுள்ளார். கேசட்டில், தான் பத்திரமாகவும், நலமாகவும் இருப்பதாகவும், வீரப்பன் தன்னை நன்றாகப் பார்த்துக் கொள்வதாகவும், கர்நாடகத்தில்யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

கேசட்டில் உள்ள குரல் ராஜ் குமாருடையதுதான் என்று அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். கேசட் குறித்து ராஜ்குமாருடைய மனைவிபர்வதம்மா கூறுகையில், தன்னை வீரப்பன் நன்றாகப் பார்த்துக் கொள்வதாக ராஜ்குமார் கூறியுள்ளார். அது உண்மையாக இருந்தால் அதற்காகவீரப்பனுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.

கேசட்டில் பேச வீரப்பன் அனுமதி கொடுத்ததற்கும் நன்றி கூறிக் கொள்கிறேன். ராஜ்குமார் கேசட்டியில் கூறியுள்ளபடி, கர்நாடக மக்கள் அமைதிகாக்க வேண்டும். எந்தவித வன்முறையிலும் ஈடுபடக் கூடாது. ராஜ்குமார் நிச்சயம் பத்திரமாக திரும்பி வருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளதுஎன்றார்.

ராஜ்குமாரின் மகன் ராகவேந்திர ராஜ்குமார் கூறுகையில், கேசட்டில் உள்ளது எங்கள் தந்தையின் குரல்தான். கேசட்டில் கூறியுள்ளபடி கர்நாடக மக்கள்அமைதி காக்க வேண்டும் என்றார்.

தற்போது சென்னையில் உள்ள மகனும், நடிகருமான சிவராஜ் குமாரும் தனது குடும்பத்தினரின் கருத்தையே பிரதிபலித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+