"ஊழல் பேய்க்கு செங்கோட்டையன் அடிமையாகி விட்டார்து

Subscribe to Oneindia Tamil

சென்னை:

குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஊழல் பேய்க்கு செங்கோட்டையன் அடிமையாகிவிட்டார் என்று முதலாவது சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஆறுமுகப் பெருமாள்ஆதித்தன் கருத்து தெரிவித்தார்.

ஜீவா போக்குவரத்துக் கழகத்தில் நடந்த ஊழல் தொடர்பாக முன்னாள் அமைச்சர்செங்கோட்டையன் மீதான வழக்கில் நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன்வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார். தனது 95 பக்க தீர்ப்பில் அவர் கூறியிருப்பதாவது:

இன்றைய காலகட்டத்தில் உலகமே ஊழலின் பிடியில் சிக்கியுள்ளது,.செங்கோட்டையன் போன்ற உயர் இடத்தில் இருப்பவர்கள் மற்றவர்களுககு முன்மாதிரியாக இருக்க வேண்டும். ஆனால் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஊழல்பேயிடம் செங்கோட்டையன் அடிமையாகிவிட்டார்.

முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் இப்படிப்பட்ட தவறுகளைச் செய்தால் நாட்டின்ஒட்டு மொத்த பொருளாதாரமே சீர் குலைந்து விடும்.

பொதுச் சேவைக்கு வரும் நபர்கள் நேர்மையுடன் இருந்தால்தான் அவர்களுக்கு கீழேபணிபுரிபவர்களும் நேர்மையாக நடந்து கொள்ள முடியும். அப்போதுதான் நாடும்முன்னேறும்.

ஊழல் குற்றங்களை அனுமதித்தால் அது நாட்டையே அழித்துவிடும். அதற்காகத்தான்ஊழல் தடுப்புச் சட்டங்கள் இயற்றப்பட்டன. ஊழல் குற்றம் புரிந்தவர்களுக்குகடுமையாக தண்டனை கொடுப்பது அவசியமாகிறது என்றார் நீதிபதி.

இவ்வழக்கில் செங்கோட்டையனுக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும்1.06 லட்ச அபராதமும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+