ரஜினி காட்டுக்குச் செல்லத் தடையில்லை என்கிறார் தமிழக டி.ஜி.பி
சென்னை:
வீரப்பனைச் சந்திக்க நடிகர் ரஜினிகாந்துக்கு எந்தத் தடையும் இல்லை. யார் வேண்டுமானாலும் காட்டுக்குள் சென்றுவீரப்பனைச் சந்திக்கலாம். ஆனால் அரசு சார்பாக கோபால் மட்டுமே தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று தமிழகடிஜிபி சர்மா நிருபர்களிடம் கூறினார்.
சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாடு-கர்நாடக மாநிலங்களின் முடிவுப்படி நக்கீரன்வாரப்பத்திரிக்கை ஆசிரியர் கோபால் 2 ம் தேதி காலை சத்தியமங்கலம் காட்டுப்பகுதிக்குச் சென்றுள்ளார்.
வீரப்பன், நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாவிடம் கொடுத்தனுப்பிய கேசட்டில் எட்டு நாட்களுக்குள் அரசுசார்பில் தூதர் அனுப்பப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி கோபால் தூதராககாட்டுக்குச் சென்றுள்ளார்.
வீரப்பனைப் பிடிப்பதற்காக இதுவரை 12 முறை அதிரடித் திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஆனால் வீரப்பனைப்பிடிக்க முடியவில்லை. வீரப்பன் விவகாரத்தில் அதிரடிப்படையினரின் நடவடிக்கையில் எனக்கு முழு உடன்பாடுஇல்லை.
நடிகர் ராஜ்குமாரை மீட்பது தொடர்பாக வீரப்பனைச் சந்திக்க ரஜினி காட்டுக்குச் செல்வதாகக் கூறியுள்ளார்.காட்டுக்கு யார் வேண்டுமானாலும் தாராளமாகச் செல்லலாம். அதற்கு அனுமதி தேவையில்லை. தற்போது அரசுதூதராக கோபால் சென்றுள்ளார். இந்த விவகாரத்தில் யாராவது ஒருவர்தான் செயல்பட முடியும். மற்றவர்கள்ஈடுபட்டால் அது தாமதத்தில் தான் முடியும் என்றார் டிஜிபி சர்மா.