இந்த வாரம்
சென்னை:
குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட 15 தரமான தமிழ்ப் படங்களுக்கு ரூ.75 லட்சம்மானியம் வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநதி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
குறைந்த செலவில் தரமான படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களைஊக்கப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் சில படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுஅவற்றுக்கு மானியம் அளிக்கப்படுகிறது.
முதல்வர் கருணாநிதியால் அறிமுகப்படுத்தப்பட்ட இத் திட்டத்தின் கீழ் 1989-ம்ஆண்டு முதல் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. 1996-ம் ஆண்டில் 28படங்களுக்கும், 1997-ல் 11 படங்களும் தேர்வு செய்யப்பட்டன.
1998-ம் ஆண்டில் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட தரமான படங்களைத் தேர்வுசெய்ய நீதிபதி கே.எஸ். பக்தவத்சலம் தலைமையில் தனிக் குழு அமைக்கப்பட்டது.
1998-ல் 70 நேரடி தமிழ்த் படங்கள் வெளியாகின. இதில் மானியம் கோரி 23படங்களின் தயாரிப்பாளர்கள் விண்ணப்பித்திருந்தனர். மானியம் வழங்கும்திட்டத்தின் கீழ் தகுதி பெற்ற 22 படங்களை தேர்வுக்குழு பார்வையிட்டு அதில் 15படங்களுக்கு மானியம் வழங்கலாம் என்று அரசுக்குப் பரிந்துரை செய்தது.
சொர்ணமுகி, கிழக்கும் மேற்கும், சேரன் சோழன் பாண்டியன், குருபார்வை,பகவத்சிங், கும்பகோணம் கோபாலு, கோல்மால், கவலைப்படாதே சகோதரா, வெட்டுஒண்ணு துண்டு ரெண்டு, உயிரோடு உயிராக, பொன்மானைத் தேடி, இனி எல்லாம்சுகமே, கலர் கனவுகள், சந்தோஷம், நிலாவே வா ஆகிய 15 படங்கள் மானியம் பெறதேர்வு செய்யப்பட்டுள்ளன.
இவற்றுக்குத் தலா ரூ. 5லட்சம் வீதம் மொத்தம் ரூ. 75 லட்சம் வழங்கப்படும். ஆகஸ்ட்10-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் திரைப்பட விருதுகள் வழங்கும்விழாவில் இந்த மானியத் தொகைகள் வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications