வன்முறையால் கர்நாடக தொழில்துறைக்கு பெரும் பாதிப்பு
பெங்களூர்:
கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய பிறகு ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களால் கர்நாடகத்தில் தொழில் துறை நடவடிக்கைகள் நின்று போய்விட்டன என்று கர்நாடக தொழில் மற்றும் வர்த்தக சபை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
ராஜ்குமார் கடத்தலால் பெங்களூர் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. இதனால் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன.திரையுலகமும் தனது நடவடிக்கைகளை நிறுத்தி வைத்தது. தியேட்டர்களில் படங்கள் ஓடவில்லை. ராஜ்குமார் திரும்பி வரும் வரை இது நீடிக்கும் என்றுகர்நாடக திரைப்பட வர்த்தக சபை தெரிவித்துள்ளது.
தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டதால் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் அரசுக்கு ஏராளமான நஷ்டம் ஏற்படும் என்றுகர்நாடக தொழில் மற்றும் வர்த்தக சபை (எப்.கே.சி.சி.ஐ.) மற்றும் கிரேட்டர் மைசூர் சேம்பர்ஸ் ஆப் இண்டஸ்ட்ரி (ஜி.எம்.சி.ஐ.) கூறியுள்ளன.
அண்மையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் கருத்தரங்கிற்கு பின் கர்நாடகாவில் 27, 000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இப்போதைய கலவரங்களால் பொருளாார ரீதியில் தொழில்துறைக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்றுஎப்.கே.சி.சி.ஐ தலைவர் தல்லம் வெங்கடேஷ், மற்றும் ஜி.எம்.சி.ஐ தலைவர் அகமது அலி, சி.ஐ.ஐ தகவல் தொடர்பாளர் ரவி ஒரு கூட்டறிக்கையில்கூறியுள்ளனர்.
ராஜ்குமார் ரசிகர்களின் மனக் கொந்தளிப்பு காரணமாகவே வன்முறை மூண்டது. நிலைமையை சீராக்க மாநில அரசும், முதல்வர் கிருஷ்ணாவும் தங்களால்இயன்றதை செய்து வருகிறார்கள் என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள்.