மாத்திரை சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் மயக்கம்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரையில், மருத்துவப் பரிசோதனையின் போது கொடுக்கப்பட்ட மாத்திரைகளைச் சாப்பிட்ட 11 மாணவர்கள், 3 மாணவிகள் மயக்கமடைந்தனர்.
இதுகுறித்துப் போலீஸார் கூறுகையில், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஒன்றில், வெள்ளிக்கிழமை மாணவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடந்தது.
அப்போது அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வைட்டமின் மற்றும் வயிற்றைச் சுத்தப்படுத்தும் மெபெக்ஸ் மாத்திரைகளை டாக்டர்கள் கொடுத்தனர்.
இதை சாப்பிட்ட மாணவ, மாணவியரில் 13 பேர் வாந்தி, மற்றும் மயக்கமடைந்தனர். இதையடுத்து அவர்கள் அரசு ராஜாஜி மருத்துவமனையில்,சேர்க்கப்பட்டனர். அவர்களின் உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என்று மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications