அஸாருதீன் மீது புதிய புகார்
லண்டன்:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஸாருதீனும், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சலீம் மாலிக்கும் தங்களது வங்கிக் கணக்குகளில் தலா 5லட்சம் பவுண்டு பனத்தைப் பரிமாற்றம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எமிரேட்ஸ் வங்கி மற்றும் பாங்க் ஆப் பாகிஸ்தான் ஆகிய வங்கிக் கணக்குகில் இந்தப பணப் பரிவர்த்தனை நடந்ததாக லண்டனிலிருந்து வெளியாகும் சண்டேடைம்ஸ் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கிரிக்கெட் வீரர்கள் வீடுகள், அலுவலகங்களில் சமீபத்தில் நடந்த வருமான வரிச் சோதனையில் இந்த தகவல்கள் தெரிய வந்ததாகவும்அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பாத ஒரு வருமானவரி அதிகாரி கூறுகையில், சஞ்சய் தத் மீது குற்றம் சாட்டப்பட்டு சிறைக்குச் சென்றதுபோல அஸாருதீனும் சிறைக்குச் செல்ல வேண்டும் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.