வீரப்பன் கேட்கும் கைதி சிறையில் இல்லை?
சென்னை:
நடிகர் ராஜ்குமாரை விடுவிக்க வேண்டுமானால் ஐந்து கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று வீரப்பன் கோரியுள்ள நிலையில், அவர்களில் ஒருவரானசத்தியமூர்த்தி, எந்த சிறையிலும் இல்லாததால் தமிழக அரசு குழப்பத்தில் உள்ளது.
சந்தன வீரப்பன் கோரிக்கைகளில் ஒன்று தமிழகத்தின் சிறைகளில் மணிகண்டன், முத்துக்குமார், சத்தியமூர்த்தி (தமிழ் தேசிய மீட்புப் படை), வெங்கடேசன் மற்றும்பொன்னி வளவன் (தமிழ்நாடு விடுதலைப் படை) ஆகிய 5 பேரை விடுவிக்க வேண்டும் என்பது. இவர்களில் சத்தியமூர்த்தி தவிர இருவர் திருச்சி சிறையிலும்,இருவர் சேலம் சிறையிலும் உள்ளனர்.
ஆனால், சத்தியமூர்த்தி குறித்துக் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அப்படி ஒரு பெயரில், யாரும் கைதானதாக போலீஸாரிடம் தகவல் இல்லை. போலீஸ்பைல்களிலும் சத்தியமூர்த்தி பெயர் இல்லை. இந்த 5 கைதிகளும் விடுவிக்கப்பட்டால்தான் வீரப்பன் தன் பிடியில் உள்ளவர்களை விடுவிப்பான் என்றுதெரிகிறது.