கார் விபத்தில் கர்நாடக முன்னாள் முதல்வர் தங்கைகள், பேத்தி பலி
பெங்களூர்:
துக்கம் விசாரிப்பதற்காக சென்ற கர்நாடக முன்னாள் முதல்வர் ஜே.எச் படேலின்சகோதரிகள் பேரன் உள்பட 4 பேர் சாலை விபத்தில் இறந்தனர்.
கர்நாடக முன்னாள் முதல்வர் ஜே.எச் படேல். அவரது தங்கை தேவிகா குமாரி. இவர்சித்ரதுர்காவில் வசித்து வந்தார். இவரது கணவர் திங்கள் கிழமை மரணமடைந்தார்.
அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள ஜே.எச் படேலின் இரு தங்கைகளானசாவித்திரம்மா, உமா ஆகியோர் தாவணகரேயில் இருந்து சென்றனர். அவர்களுடன்ஜே.எச் படேலின் மருமகள் சைலஜா, பேத்தி சக்தி ஆகியோரும் சென்றனர்.
இரவு 7.30 அளவில் சித்ர துர்கா அருகே எதிரே வந்த பஸ்சுடன் கார் மோதியது. அந்தஇடத்திலேயே சாவித்திரம்மாவும், உமாவும் இறந்தனர். சக்தி, கார் டிரைவர் சிவுஇருவரும் சித்ரதுர்கா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.சைலஜாவுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை நடந்து வருகிறது. பஸ் டிரைவர்கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வர் கருணாநிதி இந்த சோக சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துஜே.எச்.படேலுக்கு செய்தி அனுப்பியுள்ளார்.