For Daily Alerts
Just In
இந்தியாவில் விரைவில் 16 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச கால்பந்துப் போட்டி
டெல்லி:
இங்கிலாந்தில் சமீபத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கால்பந்து அணிசிறப்பாக விளையாடியதையடுத்து இந்தியாவில் 16 நாடுகள் கொண்ட கால்பந்துப்போட்டியை நடத்த இந்திய கால்பந்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
அகில இந்திய கால்பந்துக் கழக தலைவர் பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி கூறுகையில்,இந்திய அணிக்குப் பயிற்சி தர வெளிநாட்டுப் பயிற்சியாளர்களை நியமிக்க முடிவுசெய்துள்ளோம். இதே போல நிறைய வெளிநாட்டு டூர்களுக்கும் ஏற்பாடுசெய்யவுள்ளோம்.
இதேபோல, 16 நாடுகள் கொண்ட சர்வதேச போட்டிக்கும் திட்டமிடப்பட்டு வருகிறது.இதற்கு மில்லனியம் கோப்பைப் போட்டி என்று பெயரிடப்படும் என்றார் முன்ஷி.
ஐ.ஏ.என்.எஸ்.
Comments
Story first published: Wednesday, August 9, 2000, 5:30 [IST]