கோபால் வரவில்லை ... சிவசுப்ரமணியம் வருகிறார்
சென்னை:
வீரப்பனைச் சந்திக்க நக்கீரன் கோபாலுடன் சென்றுள்ள நிருபர் சிவசுப்ரமணியம் கோபால் மற்றும் நடிகர் ராஜ்குமார் ஆகியோரின் செய்தி அடங்கியஆடியோ கேசட்டுடன் சென்னை வந்து கொண்டிருக்கிறார்.
இதுகுறித்து நக்கீரன் பத்திரிக்கை அஸோசியேட் எடிட்டர் காமராஜ் கூறியதாவது:
நடிகர் ராஜ்குமாரை மீட்பதற்காக இருமாநில அரசுகளின் சார்பில் நக்கீரன் கோபால் சத்தியமங்கலம் காட்டுக்குச் சென்றுள்ளார். அவருடன் நக்கீரன்பத்திரிக்கை நிருபர் சிவசுப்ரமணியமும் சென்றுள்ளார்.
தற்போது, சிவசுப்ரமணியம், கோபால் மற்றும் ராஜ்குமார் ஆகியோரின் செய்தி அடங்கிய கேசட்டுடன் காட்டிலிருந்து சென்னைக்குக் கிளம்பி விட்டார்.காட்டிலிருந்து வெளியேறிய பிறகு அவர் டெலிபோனில் நக்கீரன் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டார்.
புதன்கிழமை நள்ளிரவு அல்லது வியாழக்கிழமை அதிகாலை 2 மணிக்கு அவர் சென்னை திரும்புவார் என்று தெரிகிறது. அவர் கொண்டு வரும் கேசட்டில்,காட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்துத் தகவல்கள் இருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால், பிணைக்கைதிகளை விடுவிப்பது மற்றும் வீரப்பனின்கோரிக்கைகளுக்கு அரசு அளித்துள்ள பதில்கள் குறித்து வீரப்பனின் முடிவு ஆகியவை குறித்த விபரங்கள் இருக்குமா என்பது தெரியவில்லை.
நடிகர் ராஜ்குமார் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் சிவசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். அவர் காட்டிலிருந்து சென்னைக்கு வர குறைந்தது 12 முதல்13 மணி நேரமாவது ஆகும். சிவசுப்ரமணியம் வருகை குறித்து முதல்வர் கருணாநிதியுடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளேன் என்றார் காமராஜ்.
யு.என்.ஐ.