அடையாளம் தேடும் நவீன் பட்நாயக்
புவனேஸ்வர்:
ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் பாரதிய ஜனதா கட்சியை நம்பியிருக்காமல் தனக்கென தனி இமேஜ் ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
பிஜூ பட்நாயக்கின் மகனாக மட்டுமே தான் அறியப்படாமல் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள விரும்புகிறார் நவீன் பட்நாயக்.அதேபோல ஒரிசாவில் தான் பாரதீய ஜனதாவை நம்பியிருக்கும் நிலையை மாற்றி, தன்னை அக்கட்சி சார்ந்திருக்க வேண்டும் என்றும் நவீன்விரும்புகிறார்.
அதற்காக நவீன் எடுத்துள்ள அஸ்திரம், பிராந்திய உணர்வு. சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அத்வானிக்கு, இவர் எழுதிய கடிதத்தில், பிகார்மாநிலம் சிங்போம் மாவட்டத்திலுள்ள சரேகேலா, கார்சுவான் ஆகிய பகுதிகளை ஒரிசா மாநிலத்துடன் இணைக்க வேண்டும். முன்பு இந்த இரண்டுபகுதிகளும் ஒரிசாவிலேயே இருந்தன. காலப்போக்கில் இவை பிகாருடன் இணைக்கப்பட்டு விட்டன.
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த இரு பகுதிகளையும் மீண்டும் ஒரிசாவுடன் இணைக்க மத்திய அரசு உதவ வேண்டும் என்று நவீன் கோரியுள்ளார்.
அதே போல, ஒரிசா மாநிலத்திற்கு மத்திய அரசு கொடுத்துள்ள ரூ 70 பில்லியன் கடன் தொகையையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் நவீன் கோரிக்கைவிடுத்துள்ளார்.
சரேய்கேலா, கார்சுவான் பகுதிகளை மீண்டும் ஒரிசாவுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஒரிசாவில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஆதரவுதெரிவித்துள்ளன.
ஒரிசாவைச் சேர்ந்த மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அர்ஜூன் சரண் சேத்தி, மத்திய அரசு சரேய்கேலா, கார்சுவான் பகுதிகளை ஒரிசாவுடன் இணைக்க ஒப்புதல்அளிக்காவிட்டால் தானும், ஒரிசாவின் பிற எம்.பி.க்களும் ராஜினாமா செய்து விடுவோம் என்று கூறியுள்ளார். இதனால் பாரதிய ஜனதா அரசுக்குபுதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
யு.என்.ஐ.