For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சண்டை நிறுத்த முடிவுக்கு பாக். காரணம் என்கிறது அமெரிக்கா

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்:

இந்திய அரசுக்கும், காஷ்மீர் தீவிரவாதிகளான ஹிஸ்புல் முஜாஹிதீன்களுக்கும்இடையிலான பேச்சுவார்த்தை முறிந்து போனதற்கு பாகிஸ்தான் காரணமாகஇருக்கலாம் என்று அமெரிக்கா சந்தேகம் தெரிவித்துள்ளது.

மீண்டும் பேச்சுவார்த்தை துவங்கும் என்றும் அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.சம்பந்தப்பட்டவர்கள், அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நடத்த வேண்டும்என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெயர் குறிப்பிட விரும்பாத சில அதிகாரிகள் கூறுகையில், ஹிஸ்புல்முஜாஹிதீன்களுக்கும், இந்திய அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முறிந்துபோனதற்கு பாகிஸ்தானே காரணமாக இருக்கலாம். தங்களைப் பேச்சுவார்த்தையில்,சேர்க்காத ஆத்திரத்தில் பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு முட்டுக் கட்டைபோட்டிருக்கலாம் என்று அவர்கள் சந்தேகம் தெரிவித்தனர்.

தேசிய பாதுகாப்புக் கவுன்சில் செய்தித்தொடர்பாளர் குரோவ்லி கூறுகையில்,அருமையான ஒரு வாய்ப்பு பறிபோவதை அமெரிக்கா விரும்பவில்லை.

சண்டை நிறுத்தத்தை ஹிஸ்புல் முஜாஹிதீன்கள் வாபஸ் பெற்றுள்ளதாக வந்தசெய்திகள் எங்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளன. பேச்சுவார்த்தை தொடர வேண்டும்என்றே நாங்கள் ஆசைப்படுகிறோம் என்றார் அவர்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X