பா.ம.க.வில் சேருவானா வீரப்பன்?
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சியில் வீரப்பனைச் சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்று கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது தனக்கும் வீரப்பனுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்றும் அவர் கூறினார்.
ராமதாஸ் கூறுகையில், எனக்கும் வீரப்பனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஒரு கட்சியின் தலைவர் என்ற முறையில் வீரப்பனுக்குப் பொதுமன்னிப்புவழங்க வேண்டும் என்று கூறுகிறேன். அதற்காக அவரை என் கட்சியில் சேர்த்துக் கொள்ள மாட்டேன்.
எந்த நிபந்தனையுமின்றி ராஜ்குமாரை வீரப்பன் விடுதலை செய்ய வேண்டும். மேலும் வீரப்பனுடன் உள்ள தமிழ்நாடு விடுதலைப்படை நக்சலைட்டுகள் திருந்திவாழ வேண்டும்.
தமிழகத்தில் உள்ள எல்லாருமே 205 டி.எம்.சி தண்ணர் திறந்து விட வேணடும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அதுபோலவே வீரப்பனும் கூறியுள்ளான்என்றார் டாக்டர் ராமதாஸ்.