"வீரப்பன் சொல்வதைக் கேளுங்கள் ... கேசட்டில் ராஜ்குமார் பேச்சு
பெங்களூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பன் கூறியுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள் என தமிழக, கர்நாடக அரசுகளுக்கு நடிகர் ராஜ்குமார் கோரிக்கைவிடுத்துள்ளார்.
காட்டில் உள்ள நடிகர் ராஜ்குமாரின் புகைப்படங்கள், வீரப்பன் கொடுத்த கேசட் ஆகியவை நக்கீரன் நிருபர் சிவசுப்ரமணியம் மூலம் புதன்கிழமை நள்ளிரவுசென்னைக்கு வந்தது. நக்கீரன் துணை ஆசிரியர் காமராஜ் இவற்றைப் பெற்றுக் கொண்டார்.
கேசட்டில் அடங்கியுள்ள விவரங்கள் குறித்து வியாழக்கிழமை காலை தமிழக டி.ஜி.பி. சர்மா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சர்மா செய்தியாளர்களிடம்பேசுகையில்,
கேசட்டில் நடிகர் ராஜ்குமாரும், கோபாலும் பேசியுள்ளனர். ராஜ்குமார் தனது பேச்சில், வீரப்பனுடைய கோரிக்கைகளை தமிழக முதல்வர் கருணாநிதியும்,கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
கோபால் தனது பேச்சில், இன்னும் ஓரிரு நாட்களில் சென்னை திரும்புவேன். தனது கோரிக்கைகள் குறித்து இரு மாநில அரசுகள் கூறியுள்ள பதிலுக்குவீரப்பன் கூறும் மறு பதிலுடன் சென்னை திரும்புவேன் என்று கூறியுள்ளார்.
இந்தப் பிரச்சினை கூடிய விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம்.அனைத்துத் தரப்பினரின் கையில்தான் இது உள்ளது என்றார்.
கேசட்டை செய்தியாளர்களும் கேட்டனர். கேசட்டுடன் சில போட்டோக்களும் வந்துள்ளன. அதில் ராஜ்குமார் உள்ளிட்ட பினைக் கைதிகளுடன்கோபால் இருக்கிறார்.
யு.என்.ஐ.