18 கி.மீ. ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த 16 வயது சிறுமி

Subscribe to Oneindia Tamil

ஐயோ பாவம், அடுத்த ஆள் கடத்தல் வரை, அவர் காட்டில் எப்படி காலம் தள்ளுவது?ஆயுதம் வாங்க வேண்டாமா?தன்னுடன் இருக்கிற தமிழ் தீவிரவாதிகளை சம்ரட்சணைசெய்ய வேண்டாமா?

தனக்கு தகவல் தருகிறவர்களுக்கு தகுந்த சன்மானங்களை அவர் வழங்க வேண்டாமா?அடுத்த ஆள் கடத்தலை திட்டமிட வேண்டாமா? அதை தமிழக, கர்நாடகஅரசுகள்தானே தர வேண்டும்!

என்ன தொகை கை மாறியது என்று தெரிந்து கொள்ளும் உரிமை நமக்குக் கிடையாது.கை மாறப் போகிற கோடிகள், நம் அப்பன் பாட்டன் வீட்டுப் பணமா? அரசாங்கப்பணம்தானே அது?

அதில் நமக்கென்ன உரிமை? அது அரசியல்வாதிகளின் உரிமை - ஆட்சியாளர்கள்உரிமை. ஆகையால் எத்தனை கோடி என்ற நம்முடைய கேள்விக்கு பதிலைஎதிர்பார்க்க முடியது.

பொது மன்னிப்பு கோரிக்கை வேறு இருக்கவே இருக்கிறது. இது இப்போதும்கேட்கப்பட்டிருக்கும். இது இப்போதும் கேட்கப்பட்டிருக்கும். இப்போதுவெளியிடப்பட்ட பட்டியலில் இது இல்லை என்பதால், இந்தக் கோரிக்கை வீரப்பரால்கைவிடப்பட்டுவிட்டது என்று நம்ப நாம் தயாராக இல்லை.

வெளியே வராத கோரிக்கைகளில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று நம்பலாம்; அந்தநம்பிக்கை வீண் போகாது. வீரப்பருடைய பொது மன்னிப்புக் கோரிக்கைக்கு ஆதரவுபெருகிற வருகிற நேரமாகிய இத்தருணத்தில், அந்தக் கோரிக்கையை அவர் விடுவாராஎன்ன?

அதோடு, தன்னுடைய கூட்டாளிகளான தமிழ்த் தீவிரவாத இயக்கத்தினருக்கும் வீரப்பர்மன்னிப்பு கோரியிருப்பார் என்றும் எதிர்பார்க்கலாம்.

இந்தப் பொதுமன்னிப்பு கோரிக்கை இன்னமும் வலுப் பெற வீரப்பர் ஒன்றுசெய்யலாம். கிருஷ்ணா தண்ணீர் கொடு என்று கேட்பதற்காக, ஆந்திரப் பிரதேசமுக்கியப் புள்ளி ஒருவரை கடத்தி, சென்னைக்கு கிருஷ்ணா தண்ணீரைவரவழைக்கலாம்; வட இந்தியப் பிரமுகர் ஒருவரை கடத்தி வைத்துக் கொண்டுதமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கு என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்குமாறுசெய்யலாம்.

அவ்வளவு ஏன் - பா.ஜ.க. புள்ளி ஒருவரை பிடித்துக் கொண்டு போய் காட்டில்வைத்துக்கொண்டு, தமிழகத்திற்கு மாநில சுயாட்சி என்று கோரி, தி.மு.க. வின் நீண்டநாள் கனவை நனவாக்கி விடலாம்.

எல்லாம் தமிழர் நல கோரிக்கைகள்! பிறகு கேட்பானேன்! பொது மன்னிப்புத்தான்!தியாகிதான்! போராளிதான்! மனிதாபிமானம்தான்!

இப்படி ஒரு கூத்து நடக்கிறதே - என்கிற கூச்ச உணர்வு நமது ஆட்சியாளர்களுக்குக்கொஞ்சம் கூட இல்லை. ஒரு கொலைகாரனிடம் இப்படியெல்லாம் மன்றாட வேண்டியநிலை ஏற்பட்டுவிட்டதே என்ற கவலை துளியும் காணோம். இப்போது ராஜ்குமாரைமீட்டாக வேண்டும்; பணிய வேண்டியதுதான்; ஒப்புக் கொள்ள வேண்டிய விஷயம்.

ஆனால் இந்த நிலை ஏன் வந்தது? இந்த மாதிரி ஒரு பேர்வழியை இவ்வளவு நாள்விட்டு வைத்திருப்பது ஏன்?

இரு மாநில போலீசார் எடுத்த நடவடிக்கைகளின் விவரம் என்ன? அது பயன் தராமற்போனது ஏன்?

ராஜ்குமாரை மீட்ட பிறகாவது வீரப்பனுக்கு எதிரான நடவடிக்கைகள் மும்முரம்அடையுமா? அல்லது பேரம்தானா? சமூக விரோதிகளை, கொலைகாரர்களை,தீவிரவாதிகளை, நாச வேலைக்காரர்களை - பேரம் பேசியே வளர்த்து விடுகிறஉரிமையை இந்த ஆட்சியாளர்களுக்கெல்லாம் யார் கொடுக்கிறார்கள்?

வீரப்பன் மனிதர்களை கொலை செய்கிறான்; அவனுக்குப் பரிந்து பேசுகிறஅரசியல்வாதிகள், சட்டத்தின் மாட்சிமையைக் கொலை செய்கிறார்கள். பொதுமன்னிப்பு என்ன- ஒரு துளி மன்னிப்புக் கூட இருவருமே அருகதை அற்றவர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+