For Daily Alerts
Just In
சாலை மறியல் செய்த 4500 கம்யூ. தொண்டர்கள் கைது
கோவை:
மத்திய அரசின் தாராளமயப் பொருளாதாரக் கொள்கையை எதிர்த்தும், தொழிலாளர் விரோதப் போக்கைக்கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சாலை மறியல் செய்ய முயன்ற 4 ஆயிரத்து 500 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
கோவை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. மத்திய அரசின்பொருளாதாரக் கொள்கையைக் கண்டித்து நடந்த போராட்டத்தில், 4 ஆயிரத்து 500 பேர் பல்வேறு இடங்களில்கைது செய்யப்பட்டனர். திருப்பூர், பல்லடம், கோவை ஆகிய இடங்களில் இந்த போராட்டம் நடந்தது.
Story first published: Thursday, August 10, 2000, 5:30 [IST]