பாகிஸ்தானுக்கு ஏவுகனைத் தொழில்நுட்ப உதவியளிக்கிறது சீனா - அமெரிக்கா
வாஷிங்டன்:
பாகிஸ்தானுக்கு அளித்து வரும் ஏவுகணைத் தொழில்நுட்ப உதவியை சீனாஅதிகரித்துள்ளதாக அமெரிக்கா புகார் கூறியுள்ளது.
பாகிஸ்தானுக்கு நீண்ட தொலைவு செல்லும் ஏவுகனைத் தயாரிப்பதற்கானதொழில்நுட்ப உதவியை சீனா அளித்து வருவதாக முன்பே அமெரிக்கா கூறியிருந்தது.தற்போது அதை அதிகரித்துள்ளதாக அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.கூறியுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் சி.ஐ.ஏ. தாக்கல் செய்த அறிக்கையில் இதுகூறப்பட்டுள்ளது. இதேபோல, ஈரானுக்கு ஏவுகணை சம்பந்தப்பட்ட அனைத்துஉதவிகளையும் ரஷ்யா செய்து வருவதாகவும் சி.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.
வட கொரியாவும் பாகிஸ்தானுக்கு ஏவுகனைத் தொழில்நுட்பத்தை வழங்கிவருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்காசிய நாடுகள் அணுஆயுதம் சம்பந்தப்பட்ட கருவிகளையும், அணு ஆயுதத்திற்கு தேவையானபொருட்களையும் மேற்கு ஐரோப்பாவிலிருந்து பெற்று வருகிறது என்றும் அந்தஅறிக்கை தெரிவிக்கிறது.
சீன நிறுவனங்கள் ஏவுகணை தயாரிப்புக்குத் தேவையான பொருட்களையும்உதவிகளையும் ஏற்கனவே ஈரான், வட கொரியா மற்றம் லிபியா போன்ற நாடுகளுக்குஅளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.