For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொள்ளாச்சியில் தென்னை விவசாயிகள் பேரணி

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

தேங்காய் விலையை 5 ரூபாயாக நிர்ணயிக்கக் கோரி தென்னை விவசாயிகள் பொள்ளாச்சியில் பேரணி மற்றும்ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பொள்ளாச்சியில் தென்னிந்திய தென்னை விவசாயிகள் சங்கத்தின் சார்பில் 12 ஆயிரம் விவசாயிகள் கலந்துகொண்ட பேரணி நடந்தது. இந்தப் பேரணிக்கு தென்னிந்திய தென்னை விவசாயிகள் சங்கத் தலைவர் கிருஷ்ணன்தலைமை வகித்தார்.

தேங்காய் விலை கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. எப்போதும் இல்லாத அளவிற்கு ரூ. 2 ரூபாயாக குறைந்துள்ளதேங்காயின் விலையை ரூ. 5 ஆக உயர்த்தி அரசு கொள்முதல் செய்ய வேண்டும்.

மேலும், அரசு தேங்காய் எண்ணெயை பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். சமையல் எண்ணெய் இறக்குமதியால் தேங்காய் எண்ணெய் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

எனவே சமையல் எண்ணெய் இறக்குமதியை 35 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்த்த வேண்டும்.கொப்பரைத் தேங்காய்க்கு விதிக்கப்பட்டுள்ள விற்பனை வரி 2 சதவீதத்தை ரத்து செய்ய வேண்டும்.

ஈரியோபைடு மற்றும் நத்தைப் புழு நோயால் தென்னை மரங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளன. இதனை ஈடுகட்டஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், அரசு தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும்.

தேங்காய் விலை உயரவும், விவசாயிகளின் நலனைக் காக்கவும், கள்ளுக் கடைகளைத் திறக்க வேண்டும்.கொச்சியில் உள்ள தென்னை வளர்ச்சி வாரியத்தின் கிளை ஒன்றைப் பொள்ளாச்சியில் நிறுவ வேண்டும்.

ஆழியாறில் செயல்பட்டு வரும் ஆராய்ச்சி மையத்தின் மேம்பாட்டிற்காக அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.தென்னை பொருட்கள் தொடர்பான பொருட்கள் உற்பத்தியைப் பெருக்க கோவை மாவட்டத்தில்தொழிற்சாலைகளை ஏற்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் பேரணி நடந்தது. சுமார்12,000 வரை கலந்து கொண்டனர்.

நிலவரியை ரத்து செய்ய கோரிக்கை

இதற்கிடையே, தென்னை விவசாயிகளின் நிலவரியை ரத்து செய்ய வேண்டும் என கீழ் பவானி விவசாயிகள்சங்கம் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோட்டில் கீழ்பவானி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் நல்லசாமி நிருபர்களிடம் கூறுகையில், சமையல்எண்ணெய் இறக்குமதியால் தேங்காய் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அரசு கொப்பரைத் தேங்காய்க்குரூ.32.50 விலை நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், விவசாயிகளிடமிருந்து ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்கள்இவற்றை வாங்க மறுக்கிறது. வியாபாரிகளிடம் இருந்து மட்டுமே கொப்பரைத் தேங்காய்களை பெற்று வருகிறது.

வியாபாரிகள் விவசாயிகளிடமிருந்து ரூ. 20க்கு மட்டுமே கொள்முதல் செய்கின்றனர். எனவே, இதனை அரசுஉரிய நடவடிக்கை எடுத்து முறைகேட்டைத் தடுக்க வேண்டும். தென்னையில் ஈரியோபைடு என்னும் நோய்த்தாக்குதலுக்குள்ளாகி, விவசாயிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். விலை வீழ்ச்சியாலும்பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, விவசாயிகளின் நலன் காக்க அரசு தென்னை விவசாயிகளின் நில வரியை ரத்து செய்ய வேண்டும் என்றார்நல்லசாமி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X