For Daily Alerts
Just In
70 வயது தந்தையை கொன்ற 45 வயது மகன்
ஈரோடு:
தந்தையைக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு முதன்மைநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள கணபதிபாளையத்தைச் சேர்ந்தவர்லோகநாதன் (45). இவர் தனது தந்தை பழனிச்சாமி (70) யுடன் வசித்து வந்தார்.
இருவருக்கும் இடையே நிலத்தை பிரித்து எடுத்துக் கொள்வதில் தகராறு ஏற்பட்டது.
இந்தத் தகராறில் பழனிச்சாமியை, லோகநாதன் தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த பழனிச்சாமி 99 ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கொடுமுடி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
ஈரோடு தன்மை நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், லோகநாதனுக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிபதி சம்பத்குமார் தீர்ப்பளித்தார்.
Comments
Story first published: Saturday, August 12, 2000, 5:30 [IST]