For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐக்கிய நாடுகள் சபையின் மில்லினியம் கூட்டம்: செப்டம்பரில் நடக்கிறது

By Staff
Google Oneindia Tamil News

ஐக்கிய நாடுகள் சபை:

ஐக்கிய நாடுகள் சபையின் மில்லினியம் கூட்டத்துக்கு நமீபியா நாட்டு அதிபரி சாம் நுஜோமாவும், பின்லாந்துநாட்டின் பெண் அதிபர் டார்ஜா ஹலோனெனும் தலைமை தாங்க உள்ளனர்.

அடுத்த மாதம் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை இந்தக் கூட்டம் நடக்கிறது. இதில் இந்தியப் பிரதமர் வாஜ்பாயும்கலந்து கொள்கிறார். ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர்களாக உள்ள 188 நாடுகளின் அதிபர்களும் இதில்பங்கேற்பர். இத்தனைத் தலைவர்கள் உலகின் ஒரே இடத்தில் கூடுவது இதுவே முதல் முறையாகும்.

பசிபிக் கடலில் உள்ள துவாலு தீவும் விரைவில் ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராகச் சேர்ப்படவுள்ளது.

இந்தக் கூட்டத்தின் முக்கிய நோக்கமே 21ம் நூற்றாண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் பங்கு என்ன என்பது குறித்தவிவாதம் தான். ஒரு நாளைக்கு 2 கூட்டங்கள் நடக்கும். ஒரூ கூட்டத்தில் 30 அதிபர்கள் பேசுவர். இதனால்,ஒருவருக்கு 5 நிமிடங்கள் மட்டுமே பேச வாய்ப்புக் கிடைக்கும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X