ரூ. 8 லட்சம் போலி செக்..பெண்ணுக்கு வலைவீச்சு
Subscribe to Oneindia Tamil
கோவை:
ஜவுளி வியாபாரத்தில் ரூ. 8 லட்சத்திற்கு செக் கொடுத்து மோசடி செய்ததாக ஒரு பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை ராம்நகரில் உள்ள விவேகானந்தா ரோட்டைச் சேர்ந்தவர் மணி. இவர் ஜவுளி ஏஜெண்டாக இருந்து வருகிறார். இவரிடம் ஜனா வசந்தாபாய்,என்பவர் துணி எடுத்து வியாபாரம் செய்து வந்தார்.
அப்போது முதல் தவணையாக ஜனவரி முதல் தேதியில் வசந்தாபாய், மணிக்கு ரூ 5 லட்சத்திற்கான செக் ஒன்றைக் கொடுத்துள்ளார். பின்னர் 3லட்சத்திற்கான செக் ஒன்றை 1.8.99ம் தேதி கொடுத்துள்ளார். ஆனால் இந்த இரண்டு செக்கும் திரும்பி வந்தன. இதையடுத்து, மணி பணத்தை திருப்பித்தருமாறு வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், ஜனா பணத்தைக் கொடுக்காமல் தப்பினார்.
இதையடுத்து, மணி கோவை போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார். இதையடுத்து கமிஷனர், மோசடியில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications