For Daily Alerts
Just In
தமிழில் "வெளுத்து வாங்கும் வீரப்பன்
சேலம்:
தமிழில் படிக்கத் திணறிய சந்தனக் கடத்தல் வீரப்பன் இப்போது நன்றாக வாசிக்கவும்,பேசவும் கற்றுக் கொண்டுள்ளார்.
நக்கீரன் கோபாலுடன் காட்டுக்குச் சென்ற நக்கீரன் நிருபர்களில் ஒருவர் இத்தகவலைத்தெரிவித்தார். முன்பெல்லாம் வீரப்பன் தமிழில் தொடர்ந்து பேசத் திணறுவான். நிறுத்தி,நிறுத்தி பேசுவது வீரப்பனின் வழக்கம்.
இப்போது தமிழில் பேசுவதிலும், படிப்பதிலும் தேறி விட்டான் வீரப்பன். தமிழர்களின்தளபதியாக தன்னை இப்போது காட்டிக் கொண்டுள்ளான் வீரப்பன்.
வீரப்பனுடன் பலர் சேர்ந்துள்ளதாகக் கூறப்படும் நேரத்தில் அவர்கள் மூலம் வீரப்பன்,நன்றாகத் தமிழ் கற்றுக் கொண்டிருக்கலாம் என்று தெரிகிறது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Monday, August 14, 2000, 5:30 [IST]