புதுவையில் நாளை சுதந்திர தினம்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதன்கிழமை 38-வது சுதந்திர தினம்கொண்டாடப்படும்.
பாண்டிச்சேரி யூனியன் பிரதேசம், முன்பு பிரான்ஸ் நிர்வாகத்தின் கீழ் இருந்தது.வெள்ளையர்களிடமிருந்து இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தும் கூட, பாண்டிச்சேரிமட்டும் பிரான்ஸ் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது.
1962-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி, பாண்டிச்சேரியை, இந்தியாவுடன் இணைக்கபிரான்ஸ் ஒத்துக் கொண்டு அதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டது.
இந்தியாவுடன் இருந்தபோதிலும், பிரான்ஸிடமிருந்து விடுதலை கிடைத்த தினத்தையும்புதுவை மக்கள் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். 15-ம் தேதி தாய்நாட்டின்விடுதலையைக் கொண்டாடிய புதுவை மக்கள், தங்களுக்குக் கிடைத்த விடுதலையைஅதற்கு அடுத்த நாள் கொண்டாடுகின்றனர்.
38-வது சுதந்திர தினத்தையொட்டி பாண்டிச்சேரி முழுவதிலும் 3 நாள் கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதன்கிழமை யூனியன் பிரதேசம்முழுதும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications