For Daily Alerts
Just In
இந்திய ஹாக்கி வீரர்களுக்கு போதைப் பொருள் சோதனை
டெல்லி:
ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளவுள்ள இந்திய ஹாக்கி அணி வீரர்களுக்குதிங்கள்கிழமை டெல்லியில் போதைப் பொருள் சோதனை செய்யப்பட்டது.
ஜவஹர்லால் நேரு மைதானத்தில் உள்ள மருத்துவ மையத்தில் இந்தச் சோதனைநடந்தது. இந்த சோதனையின் முடிவுகள் இன்னும் இரு நாட்களில் தெரிய வரும் என்றுஇந்திய ஹாக்கி சம்மேளன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்திய வீரர்கள் மீது தேவையில்லாமல் எந்தப் புகாரும் வருவதை விரும்பவில்லைஎன்றார் அவர்.
ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகள் போதைப் பொருள்சோதனைக்கு உட்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.ளி.
Comments
Story first published: Tuesday, August 15, 2000, 5:30 [IST]