மும்பையில் பிளாஸ்டிக் பைகளுக்கு "தடா
மும்பை:
மும்பையில் 20 மைக்ரான் எடைக்கும் குறைவான பிளாஸ்டிக் பைகள் சுதந்திர தினம்முதல் தடை செய்யப்பட்டுள்ளன.
இதற்கு நல்ல வரவேற்பு உள்ளதால், தடை நீடிக்கும் என்று மாநகராட்சி கமிஷனர் வி.ரங்கநாதன் நிருபர்களிடம் தெரிவித்தார்.
தடையுத்தரவு குறித்த அறிந்த முன்பே அறிந்த பலர் பிளாஸ்டிக் பைகள் வாங்கிவைப்பதை நிறுத்தி வைத்து விட்டனர். இனிமேல் 20 மைக்ரான் எடைக்கும் அதிகமானபிளாஸ்டிக் பைகளே பயன்படுத்தப்படும். ஒரு மனித தலைமுடியின் அளவு ஒருமைக்ரான் தடிமன் உடையது.
இனிமேல், கடைக்கு பொருள் வாங்குபவர்கள் தாங்களே பைகள் கொண்டுவரவேண்டும். அல்லது 2 ரூபாய் கொடுத்து பைகள் வாங்க வேண்டும்.
தடையை மீறும் பொதுமக்களுக்கு 2,000 ரூபாய் அபராதமும், கடைக்காரர்களுக்கு15,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
20 மைக்ரான் பருமனுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகளை தயாரிக்கும்கம்பெனிகளின் உரிமங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சட்டத்தை மீறுபவர்கள் மீதுநடவடிக்கை எடுக்கப்படும்.
பிளாஸ்டிக் பைகளை தடை செய்வது என்ற முடிவு பத்து மாதங்களுக்கு முன்பேஎடுக்கப்பட்டது. ஆனால் தற்போதுதான் நடைமுறைக்கு வந்துள்ளது.
யு.என்.ஐ.