For Quick Alerts
For Daily Alerts
Just In
பிலிப்பைஸ்சில் நிதி திரட்ட இலங்கைத் தமிழர்களுக்குத் தடை
மணிலா:
முறையான காரணமின்றி பிலிப்பைன்ஸ் நாட்டில் நிதிதிரட்ட நுழையும் இலங்கைத் தமிழர்களை நாட்டுக்குள்அனுமதிக்க வேண்டாம். அவர்களை உடனடியாக வெளியேற்றி விடுங்கள் என்று பிலிப்பைன்ஸ் விமான நிலையஅதிகாரிகளுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக, பிலிப்பைன்ஸ் நாட்டில் பல இலங்கைத் தமிழர்கள் நிதிதிரட்டும் பணியில்ஈடுபட்டுள்ள தகவல் பிலிப்பைன்ஸ் அரசிற்குக் கிடைத்தது.
பல வெளிநாடுகளில் பரவி இருக்கும் விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் முறைகேடாக பயணம்மேற்கொள்ள பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவைத் தளமாகக் கொண்டுள்ளனர் என்ற தகவலின் அடிப்படையில்அரசு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
Comments
Story first published: Wednesday, August 16, 2000, 5:30 [IST]