For Daily Alerts
Just In
கோவை கலவர வழக்கில் இன்று தீர்ப்பு
கோவை:
கோவையில் போலீஸ்காரர் செல்வராஜ் கொலைச் சம்பவத்தையடுத்து நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்புவழங்கப்படுகிறது.
கோவையில் போலீஸ்காரர் செல்வராஜ் கொலை சம்பவத்தையடுத்து நடந்த கலவரத்தில் அரசு மருத்துவமனையில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். இந்தவழக்கு விசாரணை கோவை கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
தற்போது இந்த வழக்கின் விசாரணை முடிந்துள்ளது. இதில், வெள்ளிக்கிழமை தீர்ப்புக் கூறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜூன் சம்பத் உட்பட 9 பேர் மீது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தீர்ப்பையொட்டி கோவை நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Comments
Story first published: Friday, August 18, 2000, 5:30 [IST]