For Daily Alerts
Just In
இலங்கை ராணுவ கமாண்டராக பாலகல்லே நியமனம்
கொழும்பு:
இலங்கை ராணுவத்தின் புதிய கமாண்டராக மேஜர் ஜெனரல் எல்.பி. பாலகல்லேநியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது இலங்கை ராணுவ கமாண்டராக உள்ள லெப்டினென்ட் ஜெனரல் சி.எஸ்.வீரசூரியா ஆகஸ்ட் 24-ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய கமாண்டராகபாலகல்லே நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமைவெளியிட்டது.
பாலகல்லே தற்போது ராணுவத்தின் துணை கமாண்டராகப் பணியாற்றி வருகிறார். வன்னிபகுதியில் பாதுகாப்புத் தலைவராகவும், ராணுவ அதிகாரிகளின் தலைவராகவும் அவர்பணியாற்றியுள்ளார் என்பது குற்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
Story first published: Friday, August 18, 2000, 5:30 [IST]