புனிதமடைந்தது" இந்திய கிரிக்கெட்
ராஜ்கோட்:
மேட்ச் பிக்ஸிங், லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளால் "கெட்டுப்போய்விட்ட" இந்திய கிரிக்கெட்டை புதுமையான முறையில் "தூய்மைப்படுத்தியுள்ளார்"டாக்டர் கர்த்தவ்ய வியாஸ்.
கெட்டுப்போய் நோய் பிடித்த நிலையில் இருந்த கனவான்களின் விளையாட்டு என்று அழைக்கப்படும் கிரிக்கெட்டை இந்து மதச் சடங்குகளால் புனிதப்படுத்திவிட்டதாகக் கூறுகிறார் பரோடாவைச் சேர்ந்த கர்த்தவ்ய வியாஸ்.
இதற்காக அவர் என்ன செய்தார் தெரியுமா?. தனக்கு உதவியாக ஒரு இந்து பூசாரியை அழைத்துக் கொண்டார். உடன் கிரிக்கெட் மட்டை, பந்து,ஸ்டம்புகள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டார்.
பின்னர் பூசாரி மந்திரங்கள் ஓத கிரிக்கெட் மட்டை, பந்து, ஸ்டம்புகள் மீது தான் கொண்டு வந்திருந்த கங்கை நீரைத் தெளித்தார். பின்னர் அவற்றின் மீதுபசும்பாலைத் தெளித்தார்.
புனிதமடைந்த" கிரிக்கெட் மட்டை, பந்து, ஸ்டம்புகளை தனது ஆதரவாளர்களுடன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலர் லேலேஅலுவலகத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றார்.
அப்போது அலுவலகத்தில் லேலே இல்லை. இதையடுத்து அங்கிருந்து சிறிது தூரத்தில் உள்ள லேலேவின் வீட்டுக்குச் சென்று கிரிக்கெட் மட்டை, பந்து,ஸ்டம்புகளை ஒப்படைத்தார் கர்த்தவ்ய வியாஸ். சிறிது நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்த பின் வீட்டுக்குத் திரும்பிச் சென்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications