மீண்டும் ஈவ்-டீசிங் ... கண்டித்த பெண் கொலை

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்:

பள்ளி மாணவிகளை கேலி செய்ததால் இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டது.இதில் மாணவியை கேலி செய்தவர்களைக் கண்டித்து மோதலில் இறங்கிய பெண்கொல்லப்பட்டார்.

ஈவ்-டீசிங் கொடுமை சமீபகாலமாக தமிழகத்தில் மீண்டும் தலை தூக்கியுள்ளது. சிலவருடங்களுக்கு முன் சென்னையைச் சேர்ந்த சரிகா ஷா என்ற மாணவி ஈவ்-டீசிங்செய்த வெறித்தனத்தால் விபத்துக்குள்ளாகி இறந்தார்.

சில நாட்களுக்கு முன் காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவி தீபா ஈவ்-டீசிங் காரணமாகதற்கொலை செய்து கொண்டு இறந்தார். இந்த நிலையில் மீண்டும் ஒரு ஈவ்-டீசிங் பலிவியாழக்கிழமை யன்று நடந்துள்ளது.

தஞ்சாவூர் அருகே உள்ளது திருக்கருகாவூர். இங்குள்ள அரிஜனக் காலனியைச் சேர்ந்தமாணவிகள் சிலர் பள்ளி முடிந்து அக்ரகாரத் தெருவில் வரும்போது அங்குள்ளஇளைஞர்கள் சிலர் அந்தப் பெண்களை கேலி செய்தனர்.

வீட்டுக்குச் சென்று அந்த பெண்கள் தங்களை கேலி செய்தது குறித்து பெற்றோரிடம்தெரிவித்தனர். மாணவிகளின் உறவினர்கள் கேலி செய்தவர்களை கண்டித்தனர்.இதனால் இரு பிரிவினருக்குமிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இரு பிரிவினரும்கடப்பாரை போன்ற பயங்கர ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இந்தத் தாக்குதலில் அரிஜனக் காலனியைச் சேர்ந்த நாகராஜன் என்பவரின் மனைவிவேலம்மாள் தலையில் கடப்பாரையால் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயேஉயிரழந்தார். பலர் காயமடைந்தனர்.

தகவல் கிடைத்த போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து வந்து பாலாஜி (25),கோவிந்தராஜ் (25) ஆகிய இரண்டுபேரையும் கைது செய்துள்ளனர். இந்தசம்பவத்தைத் தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+