For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வட ஈராக்கில் துருக்கி குண்டு வீச்சு - 38 பேர் சாவு

By Staff
Google Oneindia Tamil News

அங்காரா:

ஈராக்கின் வட பகுதியில் துருக்கி நாட்டு போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதில் 38 பேர் கொல்லப்பட்டனர். 11 பேர்காயமடைந்தனர்.

இத் தகவலை வட ஈராக் பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள குர்திஸ் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.

துருக்கி-ஈரான்-ஈராக் ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் துருக்கிய புரட்சிப் படையினரின் முகாம்கள் ஏராளமாக உள்ளன. ஈராக்கின்எல்லைக்குள் உள்ள துருக்கிய புரட்சிப் படையினர் முகாம்கள் மீது துருக்கி நாட்டு போர் விமானங்கள் திடீரென்று குண்டுகள் வீசின.

இதில் 38 பேர் கொல்லப்பட்டனர். 11 பேர் காயமடைந்தனர். 4 பேரைக் காணவில்லை என்று குர்திஸ்ய ஜனநாயகக் கட்சியின் செய்தித் தொடர்பாளர்தெரிவித்தார்.

ஆனால் இந்த குண்டு வீச்சு குறித்து துருக்கிய ராணுவ அதிகாரிகள் எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டனர். வட ஈராக்கில் வசிக்கும் மக்கள் மீது குண்டுவீசவேண்டும் என்பது எங்களது நோக்கமல்ல. புரட்சிப் படையினர் தான் எங்களது இலக்கு என்று அவர்கள் தெரிவித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X