இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது
கொழும்பு:
இலங்கை நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை கலைக்கப்பட்டது. அக்டோபர் 10-ம்தேதி தேர்தல் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
225 உறுப்பினர் கொண்ட நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவதற்கு ஒருவாரத்திற்கு முன்பே அது கலைக்கப்பட்டு விட்டது.
17 ஆண்டுகளாக நீடித்து வரும் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் புதியஅரசியல் சட்டத் திருத்த மசோதாவை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கொண்டு வந்தார்.ஆனால் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் புத்த மத சாமியார்கள்கடுமையாக எதிர்த்ததால், மசோதா அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது.
இதையடுத்து விரைவில் அதிபர் சந்திரிகா நாடாளுமன்றத்தைக் கலைத்து விடுவார்என்று கூறப்பட்டது. இந்த நிலையில் மசோதா தாக்கல் செய்து 2 வாரங்கள் முடிந்தநிலையில், இப்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கலைப்புக்குப் பின் அதிபர் சந்திரிகா கூறுகையில், புதிதாகதேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்றத்தில் மசோதா மூன்றில் இரண்டு பங்குமெஜாரிடிட்டியுடன் நிறைவேற்றப்படும். அது சாத்தியப்படாவிட்டால், சாதாரணமெஜாரிட்டியுடன் நிறைவேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்என்றார்.
மாநிலங்களுக்கு அதிகாரப் பகிர்வு, புதிய வட கிழக்கு மாகாணக் கவுன்சில் உள்பட பலமுக்கிய அம்சங்களைக் கொண்டது இந்த மசோதா என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications