For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொறுப்பில்லாமல் பேசாதீர்கள் ...ஜெ.வுக்கு ராமதாஸ் அறிவுரை

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

நெருக்கடியான நேரத்தில் அரசுக்கு யோசனை சொல்ல வேண்டுமே தவிர, பொறுப்பற்றமுறையில் பேசக் கூடாது என பாட்டாளி மக்கள் கட்சி ராமதாஸ், ஜெயலலிதாவிற்குகண்டனம் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் ராமதாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் விவகாரத்தில் கர்நாடகத்தில் உள்ள தமிழர்களின்நலன்களும் அடங்கியுள்ளது. இதனைப் பாதுகாக்க வீரப்பன், ராஜ்குமாரை விடுவிக்கவேண்டும். அல்லது ராஜ்குமாருடன் வீரப்பன் சரணடைய வேண்டும்.

இந்த கருத்தை அரசு தூதுவராகச் சென்றுள்ள நக்கீரன் கோபால், வீரப்பனிடம்தெரிவிக்க வேண்டும். இந்தப் பிரச்னையில், வீரப்பனைச் சுட்டுத் தள்ள தேவாரத்தைஅனுப்ப வேண்டும் என ஜெயலலிதா கூறியுள்ள கருத்து பொறுப்பற்ற பேச்சாகஉள்ளது.

நெருக்கடியான காலக் கட்டங்களில், அரசுக்கு யோசனை கூற வேண்டுமே தவிர,இப்பிரச்னையை அரசியலாக்கக் கூடாது.

திருப்பூரில் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை சாார்பில் சமூக நீதி மாநாடுநடந்துள்ளது. இந்த மாநாட்டில் எவ்வித அரசியல் முக்கியத்துவமும் இல்லை.

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அடுத்த கட்ட நடவடிக்கையாக ஒவ்வொருதொகுதியிலும், மகளிர் அணி மாநாடு நடத்தத் திட்டமிட்டு வருகிறோம் என்றுராமதாஸ் தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X