For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீரப்பனை இன்னும் கோபால் சந்திக்கவில்லை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சததியமங்கலம் காட்டுக்குச் சென்றுள்ள அரசுத் தூதர் நக்கீரன் கோபால், காட்டுக்குள்கடும் மழைபெய்வதால் இன்னும் வீரப்பனைச் சந்திக்கவில்லை என்று தெரிகிறது.

சந்தனக் கடத்தல் வீரப்பனைச் சந்திப்பதற்காக இரண்டாவது முறையாக காட்டுக்குச்சென்றுள்ளார் கோபால். புதன்கிழமை கிளம்பிச் சென்ற அவர் தற்போது காட்டுக்குள்கன மழை பெய்வதால் இன்னும் உள்ளே நுழையாமல் உள்ளதாகத் தெரிகிறது.

மேலும், வீரப்பனிடமிருந்தும் சந்திப்புக்கான அழைப்பு ஏதும் கோபாலுக்குவரவில்லை என்று கூறப்படுகிறது. வீரப்பன் மறைந்துள்ள காட்டுப் பகுதி அமைந்துள்ளதாளவாடி, தலைமலை பகுதிகளில் இப்போது பலத்த மழை பெய்து வருகிறது.

தனது கோரிக்கைகளை நிறைவேற்ற 19-ம் தேதி வரை வீரப்பன் கெடு விதித்துள்ளான்.எனவே வெள்ளிக்கிழமை காலையில், வீரப்பனை கோபால் சந்திக்கலாம் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, தாளவாடி, சத்தியமங்கலம் பகுதியில் உள்ள செக் போஸ்ட்டுகளில்போலீஸ் காவல் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் பஸ்போக்குவரத்தும் குறைந்து விட்டது. தமிழகப் பகுதியிலிருந்து, கர்நாடகமாநிலத்திற்குள் எந்தப் பஸ்சும் செல்லவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X