2 காஷ்மீர் தீவிரவாதிகள் சரண்
ஜம்மு:
ஹிஸ்புஸ் முஜாஹிதீன் தன்ஸீம் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகளஎல்லைப் பாதுகாப்புப் படையிடம் சரண் அடைந்துள்ளனர்.
இருவரும் தங்களிடமிருந்த ஆயுதஙகளை ஒப்படைத்து விட்டு சரண் அடைந்தனர்.இருவரும் ரஜோரி பகுதியில் செயல்பட்டு வந்தவர்கள்.
முகம்மது ஷெரீப், முகம்மது ஆரிப் ஆகிய இரு தீவிரவாதிகளும் எல்லைப்பாதுகாப்புப் படை அதிகாரி மேஜர் ஜெனரல் ரிச்சர்ட் கரே முன்னிலையில் சரண்அடைந்தனர்.
15 வயதாக இருக்கும்போது ஷெரீப் தீவிரவாதியாக மாறினர். பாகிஸ்தான்ஆக்கிரமிப்பில் இருக்கும் காஷ்மீரில் உள்ள பாகிஸ்தானிய உளவு அமைப்பானஐ.எஸ்.ஐ. பயிற்சி முகாமில் இவருக்குப் பயிற்சி கொடுக்கப்பட்டது. அங்கு 1997-ம்ஆண்டு அடிப்படைப் பயிற்சிகளை" முடித்துக் கொண்ட பிறகு காபூலுக்குஅனுப்பப்பட்டார். அங்கு சிறப்புப் பயிற்சிகள்" கொடுக்கப்பட்டது.
வெடிகுண்டுகளை வெடிக்க வைப்பது, ஆர்.பி.ஜி-7 ரக துப்பாக்கிளை இயக்குவது,ராக்கெட்டுகளை வெடிக்கச் செய்வது ஆகிய பயிற்சிகள் ஷெரீப்புக்குத்தரப்பட்டுள்ளது.
மூன்று வருட கடுமையான" பயிற்சிக்குப் பிறகு பிற தீவிரவாதிகளுடன் சேர்ந்துஇந்தியாவுக்கு அனுப்பப்பட்டார் ஷெரீப். காந்தி-புதால் பிரிவின் பட்டாலியன் பிரிவுதளபதியாகவும் நியமிக்கபட்டார்.
இந்த நிலையில் ஷெரீப்பை சரண் அடைய வைப்பதற்காக உள்ளூர் மக்களின்ஒத்துழைப்புடன் எல்லைப் பாதுகாப்புப் படை முயற்சிகள் மேற்கொண்டது. அதற்குஇப்போது பலன் கிடைத்துள்ளது.
சரண் அடைந்த ஷெரீப், ஒரு ஏகே47 துப்பாக்கி, ஐந்து துப்பாக்கி மேகசின், ஒருரேடியோ, இரண்டு கையெறி குண்டுகள் ஆகியவற்றை எல்லைப் பாதுகாப்புப் படைவீரர்களிடம் ஒப்படைத்தார்.
சரண் அடைந்த மற்றொருவரான ஆரிப்பும் ரஜோரி பகுதியைச் சேர்ந்தவர். 1994-ம்ஆண்டு தீவிரவாதியாக உருவெடுத்தவர். ரஜோரி-பூஞ்ச் பகுதி ஹிஸ்புல் முஜாஹிதின்தன்ஸீர் பிரிவின் கமாண்டர்". பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மரின்முசாபரபாத்தில் பயிற்சி பெற்றவர். ஒருவருடம் தீவிரவாதப் பயிற்சி எடுத்துக்கொண்டவர். இந்தியாவுக்குள் 1997-ம் ஆண்டு ஊடுறுவியவர்.
காஷ்மீர் பகுதியில் இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து தீவிரவாத முகாமுக்கு அனுப்பும்பொறுப்பு இவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது.
சரண் அடைந்த ஆரிப், ஒரு ஏகே.47 துப்பாக்கி, நான்கு துப்பாக்கி மேகஸின், நானகுகையெறி குண்டுகள் ஆகியவற்றை ஒப்படைத்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications