For Quick Alerts
For Daily Alerts
Just In
வீரப்பன் கேசட் பாண்டிக்கு வந்தது எப்படி?
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரிக்கு வீரப்பன் அனுப்பிய கேசட் வந்த விதம் குறித்து விரிவான விசாரணைநடத்த வேண்டும் என்று முன்னாள் முதல்வர் டி.ராமச்சந்திரன் மத்திய அரசைக்கோரியுள்ளார்.
பாண்டிச்சேரியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வீரப்பன் அனுப்பிய ஒருகேசட் பாண்டிச்சேரியிலிருந்து வந்ததாக தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.எனவே பாண்டிச்சேரிக்கும், வீரப்பனுக்கும் என்ன சம்பந்தம் என்று மத்தியஅரசுவிசாரிக்க வேண்டும் என்றார் அவர்.
இதேபோன்ற கோரிக்கையை ஏற்கனவே மாநில காங்கிரஸ் தலைவர்நாராயணசாமியும் விடுத்துள்ளார். இதுதொடர்பாக மாநில, மத்திய அரசுகளிடமிருந்துஎந்த பதிலும் இல்லை.
யு.என்.ஐ.
Comments
Story first published: Friday, August 18, 2000, 5:30 [IST]