பெங்களூர் பள்ளி, கல்லூரிகளை பயமுறுத்திய வெடிகுண்டு புரளி
பெங்களூர்:
பெங்களூரில் மீண்டும் பள்ளி, கல்லூரிகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாகப் புரளி கிளம்பியது. இதையடுத்து விடுமுறை விடப்பட்டது.
இது குறித்து நகர போலீஸ் கமிஷனர் டி.மடியாள் நிருபர்களிடம் கூறியதாவது:
சனிக்கிழமை காலை ராஜாஜிநகர் கே.டி.எஸ்.சி. கல்லூரி, மற்றும் காமாட்சிப்பாளையத்தில் உள்ள எஸ்.வி.ஜி.சன்ரைஸ் பள்ளிக்கூடத்தில் வெடிகுண்டுகள்வைத்திருப்பதாக யாரோ அடையாளம் தெரியாத சிலர் தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகத்தார் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாகப் போலீஸார் சம்பவஇடத்திற்கு மோப்ப நாய்ப்படையுடன் விரைந்து சென்றனர். அவர்கள் அங்கு சென்று சோதனை நடத்தியதில் அங்கு வெடிகுண்டு எதுவும் வைக்கப்படவில்லைஎன்றும், அது புரளி என்றும் தெரிய வந்தது என்றார் மடியாள்.
கடந்த வாரமும் இதே போல் பெங்களூரில் சில பள்ளிகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக யாரோ தொலைபேசி மூலம் கூறினார்கள். இதையடுத்துபள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. போலீஸார் அங்கு சென்று சோதனை நடத்தியதில் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் வெடிகுண்டுகள் எதுவும்வைக்கப்படவில்லை என்றும், அது புரளி என்றும் தெரியவந்தது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications