வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பஸ்: 40 பேர் பலி?
சதோல் (மத்தியப் பிரதேசம்):
மத்தியப் பிரதேசத்தில் ஒரு பஸ்ஸை காட்டாற்றறு வெள்ளம் அடித்துச் சென்றது. இதில் அந்த பஸ்ஸில் பயணம்செய்த 40 பேர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 7 பேர் மட்டும் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை மாலை வியாஹரி என்ற இடத்திலிருந்து சிந்திக்கு அந்த தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது.மொத்தம் அந்த பஸ்ஸில் 70 பேர் இருந்தனர்.
பானஸ் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. சிந்தி ரோட்டில் ஒரு பாலத்தையே வெள்ளம்மூழ்கடித்துள்ளது. ஆனால், பஸ்ஸின் டிரைவர் மூழ்கிக் கிடந்த அந்தப் பாலத்தைக் கடக்க முயன்றார். அப்போதுவெள்ளம் அந்த பஸ்ஸை இழுத்துச் சென்றது.
இதில் 15 முதல் 20 பேர் பஸ்ஸில் இருந்து குதித்து கரையில் இருந்த மரங்களில் தாவி வெள்ளத்திலிருந்து தப்பினர்.சுமார் 7 பேரை அந்தப் பகுதி மக்கள் காப்பாற்றினர். ஆனால், பஸ்ஸில் இருந்த பிற பயணிகள் சுமார் 40 பேரின்நிலைமை தெரியவில்லை. அவர்கள் ஆற்றில் மூழ்கியிருக்கலாம் எனத் தெரிகிறது.
கடும் மழை காரணமாகவும் இருட்டு காரணமாகவும் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டன. இரவு வரை ஆற்றில்அடித்துச் செல்லப்பட்ட பஸ்ஸை கண்டுபிடிக்க முடியவில்லை.
மருத்துவர்கள் குழுவும், போலீசாரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.