துபாயிலிருந்து ரூ. 44 லட்சம் தங்கக் கட்டிகள் கடத்தி வந்தவர் கைது

Subscribe to Oneindia Tamil

மும்பை:

துபாயிலிருந்து மும்பை வந்த விமானப் பயணியிடமிருந்து ரூ. 44.25 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்துக்கு துபாயிலிருந்து கல்ஃப் ஏர் விமானம் சனிக்கிழமை காலை வந்தது.

விமானத்திலிருந்து இறங்கிய பயணிகளிடம் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஒரு பயணி மட்டும் தன்னிடம் சோதனை செய்வதற்குஏதுமில்லை என்று கூறிவிட்டு சோதனை செய்யும் இடத்தை விட்டு உடனே செல்ல முயன்றார்.

அந் நபரின் இச் செய்கையால் சந்தேகமடைந்த சுங்கத் துறை அதிகாரிகள் அவரிடம் தீவிர சோதனை நடத்தினர். அவரது பேண்ட் பையில் செல்போன்கவர்கள் இருந்தன. அவற்றைச் சோதனை செய்தபோது அந்த கவர்களுக்குள் 9.67 கிலோ எடையுள்ள 83 தங்கக் கட்டிகள் இருந்தன.

சர்வதேச சந்தையின் அதன் மதிப்பு ரூ. 44.24 லட்சமாகும். விசாரணையில் அவர் பெயர் சையத் அலி பாஷா (45) என்றும், இந்தியாவைச் சேர்ந்தவர் என்றும்தெரியவந்தது.

துபாயில் சமையல்காரராகப் பணியாற்றி வரும் இவர், ஒவ்வொரு முறையும் இந்தியாவுக்கு வரும்போது இப்படி தங்கத்தைக் கடத்தி வருவார் என்றும்இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 14 முறை துபாயிலிருந்து இந்தியாவுக்கு வந்து சென்றுள்ளார் என்றும் தெரியவந்தது.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+